Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் பராசக்தி மாரியம்மன் ... குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பறவை காவடி குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா விழாக்கோலம் பூண்ட நகரம்
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா விழாக்கோலம் பூண்ட நகரம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
11:04

 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.


உடுமலை நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவுக்கு, மார்ச் 24ல், நோன்பு சாட்டப்பட்டது. இதையடுத்து பக் தர்கள் விரதம் துவக்கினர். கடந்த 3ம் தேதி கொடியேற்றம் நடைபெற்ற பிறகு, பக்தர்கள் பூவோடு எடுக்கத் துவங்கினர். கோவிலில், திருக்கம்பம் மார்ச் 31ல் நடப்பட்டது. திருக்கம்பத்துக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து செலுத்தி, வழிபாடு செய்து வருகின்றனர். தீர்த்த குடங்களில் வேப்பிலை சொருகி, மஞ்சளிட்டு கொண்டு வந்து திருக்கம்பத்துக்கு ஊற்றி வருகின்றனர். நகரின் ஒவ்வொரு குடியிருப்பில் இருந்தும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருவதால், நகரே திருவிழா கோலம் பூண்டுள்ளது. நாள்தோறும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது.


இன்று, இரவு, 7:00 மணிக்கு, அன்னவாகனத்திலும், நாளை (7ம் தேதி) சிம்ம வாகனத்திலும், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. வரும் 8ம் தேதி அதிகாலை மாவிளக்கு எடுத்தலும், மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு, 8:00 மணிக்கு மயில் வாகனத்தில், சுவாமி, அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா வருகின்றனர். வரும் 9ம் தேதி மாலை, 4:15 மணிக்கு தேரோட்டம் நடக் கிறது. 10ம் தேதி காலை ஊஞ்சல் உற்சவம், இரவு, 7:00 மணிக்கு, அம்மன் பரிவேட்டையும், இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கையும் நடக்கிறது. திருவிழாவையொட்டி குட்டை திடலில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகளை ஆடி மகிழ்ந்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 
temple news
 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய வழிபாடு நடைமுறையில் ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar