Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் புத்தாண்டில் குமரி ... மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனை மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: பழங்களை அர்ப்பணித்து லிங்கபைரவி வழிபாடு
எழுத்தின் அளவு:
ஈஷாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: பழங்களை அர்ப்பணித்து லிங்கபைரவி வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2023
09:04

தொண்டாமுத்தூர்: தமிழ் புத்தாண்டு தினத்தில், கோவை ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு, பல வகையான பழங்களை அர்ப்பணித்து பொதுமக்கள் வழிபட்டனர்.

கோவை, ஈஷா யோகா மையத்தில், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நடந்தது. அதன் ஒரு பகுதியாக, ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு, பல வகையான பழங்களை அர்ப்பணித்து பொதுமக்கள் வழிபட்டனர். சுற்றுவட்டார கிராம மக்களால், பல வகையான பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட லிங்க பைரவி தேவி திருமேனியை, பொதுமக்கள் ஆதியோகி சிலை முன் ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலையில், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மற்றும் ஈஷா சமஸ்கிரிதி மாணவர்களின் பக்தி பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், லிங்க பைரவி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், லிங்கபைரவியை தரிசித்தனர்.

ஈஷாவில் நடந்த மஹா சிவராத்திரி விழாவின்போது, பக்தி நயம் ததும்பும் தேவார பாடல்களை தமிழக கிராமங்கள்தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்; ஆதியோகி முன், தேவார பாடல்களை பாடி அர்ப்பணிக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியிருந்தார். அதன் துவக்கமாக, சென்னையை சேர்ந்த, சூரிய நாராயணன் என்ற 9 வயது சிறுவன், தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதிசூடிய போன்ற தேவாரப் பாடல்களை பாடி, ஆதியோகி திருமேனியை பரிசாக பெற்றார். அதேபோல், ஏராளமான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar