அன்னூர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2023 08:04
அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று துவங்கியது.
பிரசித்தி பெற்ற அன்னூர் மாரியம்மன் கோவில், 33 வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா நேற்று துவங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு பூச்சாட்டு துவங்கியது. அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர், அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 24ம் தேதி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை கம்பம் நடுதலும், பூவோடு எடுத்தலும் நடக்கிறது. வருகிற மே 1ம் தேதி மாலை அணிக்கூடை எடுத்தலும், மே 2ம் தேதி அம்மன் அழைப்பு, பொதுமக்கள் பூவோடு எடுத்தல், திருக்கல்யாண உற்சவம், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மே 3ம் தேதி பொங்கல் வைத்து, மாவிளக்கு ஊர்வலத்துடன் கம்பம் கலைக்கப்படுகிறது.