Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகஸ்தீஸ்வரர் கோவிலில் ராசி மண்டல ... நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி கோவில்களில் குரு பெயர்ச்சி : நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
புதுச்சேரி கோவில்களில் குரு பெயர்ச்சி : நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2023
10:04

புதுச்சேரி, : புதுச்சேரியில் சித்தானந்த சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் குருபெயர்ச்சி விழா விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

குரு பகவான் நேற்றிரவு 11.27 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். அதனையொட்டி புதுச்சேரியில் பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடந்தது. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

சித்தானந்த சுவாமி கோவில்: கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டையுடன் குருபெயர்ச்சி விழா துவங்கியது. இரவு 8 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமத்தை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குருபகவானுக்கு மகா அபி ேஷகம் நடந்தது. பின்னர் குருபெயர்ச்சியையொட்டி இரவு 11.27 மணிக்கு குருபகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சனீஸ்வரர் கோவில்: புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் உள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு, குருபெயர்ச்சி மகா யாகம் மற்றும் சிறப்பு லட்ச்சார்ச்சனை நடந்தது.இதற்கான பூஜை நேற்று காலை கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ேஹாமம், கோ பூஜை, மகாலட்சுமி ேஹாமம் நடந்தது பின்னர் 1008 கொழுக்கட்டை நிவேத்தியம் மற்றும் 30 வகையான அபி ேஷகம் நடந்தது. இரவு 11.27 மணிக்கு குரு பெயர்ச்சி சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து குரு சாந்திேஹாமம், நவக்கிரக சாந்தி ேஹாமம், நட்சத்திர ேஹாமம், ராசி ேஹாமம், தட்சிணாமூர்த்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு ேஹாமங்கள் நடந்தன. ராசி பரிகார ேஹாமத்திற்கு பிறகு குருபகவானுக்கு 1008 லிட்டர் பால் அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். குருபெயர்ச்சி விழாவில் குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் சிதம்பர கீதாராம் குருக்களால் சாற்றப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar