Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
13ம் ஆண்டு திருமலை பாத யாத்திரை! பெருமாள் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2012
10:09

திருத்தணி: மத்தூர் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். இரவு காவலாளி கூச்சல் போட்டதால், பணம், நகைகள் தப்பின. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில் மத்தூரில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு, கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயவேல் கோவிலை பூட்டிக் கொண்டு சென்றார். அங்கு, இரவு காவலாளியாக தணிகாசலம், 38 என்பவர் இருந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில், மர்ம நபர்கள் கோவிலின் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்தனர். பின், உண்டியல் மற்றும் மூலவர் சன்னிதிக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது காவலாளி தணிகாசலம் மர்ம நபர்கள் கோவில் உள்ளே இருப்பதை பார்த்து, திருடன், திருடன் என, கூச்சல் போட்டார். இதனால், கோவில் அருகில் குடியிருந்த பொதுமக்கள், 30க்கும் மேற்பட்டோர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து அங்குள்ள ஏரிக்குள் ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில் தக்கார் ஜெயசங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயவேலு ஆகியோர் அம்மன் கோவிலு<க்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, நகைகள், உண்டியல் பணம் மற்றும் எந்த பொருளும் கொள்ளை போகாமல் இருந்தது தெரிய வந்தது. காவலாளி கூச்சல் போட்டதால், பணம், நகைகள் தப்பின.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரியில் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தின் 33வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆடி மாத ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar