Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ... பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு மலர் வழிபாடு பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு மலர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தேர் திருவிழா ; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தேர் திருவிழா ; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

02 மே
2023
11:05

மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் இன்று நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ஒன்றாக  திகழ்ந்து வருகிறது. தேவாரப் பாடல் பெற்ற இந்த கோவிலின் சித்திரை வசந்த உற்சவம் கடந்த 25- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் நாள் திருவிழாவான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து அபிராமி  சமேத அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. மகேஷ் குருக்கள் தலைமையிலானோர் பூஜைகளை நடத்தினர்.  தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய  தம்பிரான் சுவாமிகள் தேரினை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க நான்கு  மாட  வீதிகளையும் வளம் வந்த தேர் நிலையை அடைந்தது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி தலைமையில் கோவில் உள்துறை சூப்பிரண்டு விருதகிரி மேற்பார்வையில் ஊழியர்கள் செய்திருந்தனர். பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 ... மேலும்
 
temple news
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar