பெரியகுளம்: பெரியகுளத்தில் சிவாலயங்களில் திருக்கல்யாணம் கோலாலமாக நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் தென்கரை ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் கோலகாலமாக நடந்தது. மேளதாளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் காளகஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெண் பக்தர்கள் கணவருக்கு ஆயுள் விருத்தி உட்பட சகல ஐஸ்வர்யம் வேண்டி தாலியை மாற்றிக் கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு மஞ்சள்கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. பெரியகுளம் வடகரை தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள்கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது.