Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளழகருக்கு எதிர்சேவை : அழகரை ... திருத்தணி முருகன் கோவிலில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் திருத்தணி முருகன் கோவிலில் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 மே
2023
08:05

உத்தரகோசமங்கை, மே 4- உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்கள நாத சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவாலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை உற்ஸவ விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். சித்திரை உற்ஸவம் பெருவிழாவை முன்னிட்டு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்தில் கோயில் ஸ்தானிய குருக்களால் கடந்த ஏப்.,26 அன்று கொடிபட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு வகையான அலங்கார வாகனங்களில் உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மன் வீதி உலா புறப்படும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

சித்திரை பெருவிழாவினைமுன்னிட்டு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறம் உள்ள அலங்கார திருமண மண்டபத்தில் திருக்கல்யாண உற்ஸவம் நேற்று மாலை 5:30 மணியளவில் நடந்தது. உற்ஸவமூர்த்திகள் மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் மற்றும் பிரியா விடை உடன் மாலை 4:30 மணியளவில் அலங்கார கொழு மண்டபத்தில் காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் ஸ்தானிய குருக்களால் உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மனின் கழுத்தில் தங்கம், வைரம் உள்ளிட்டவைகளால் ஆன மங்கள நாண் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் மீது அச்சதை துவப்பட்டு ஆசீர்வாதம் செய்யப்பட்டது. தீப, தூப அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ராமநாதபுரம் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இன்று மாலை 4:00 மணிக்கு மேல் 60 அடி உயரமுள்ள பெரிய தேரில் உற்ஸவமூர்த்தி புறப்பாடாகி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar