திருப்புல்லாணி, திருப்புல்லாணியில் உள்ள ஓடக்கரை காளியம்மன் கோயிலில் 24 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பொங்கல் விழா மற்றும் பூச்சொரிதல் விழா நடந்தது.
மூலவர் காளியம்மனுக்கு காலை 10:30 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:30 மணியளவில் ஓம் சக்தி மன்றத்திலிருந்து ஏராளமான பெண்கள் பூத்தட்டுடன் திருப்புல்லாணி நான்கு ரதவீதிகளிலும் உலா வந்து கோயிலை சென்றடைந்தனர். காளியம்மன் கோயில் வளாகத்தில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஓடக்கரை காளியம்மன் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.