மேலுார்: மேலூர், திருவாதவூரில் பிடாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா (மே 9) நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து. மே 10 முதல் மே 15 வரை தினமும் அம்மன் வாகனங்களில் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே 16 பக்தர்கள் கோயிலில் பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து சட்டத்தேரில் அம்மன் எழுதருள்கிறார். மே 17 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.