சித்திரை மாத பிரம்மோற்சவத்தில் பல்லக்கு நாச்சியார் கோல புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2023 08:05
சென்னை, திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவம், 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாள் விழாவான நேற்று காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும் பார்த்தசாரதி பெருமாள் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் விழாவான இன்று, காலை சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானப் புறப்பாடும், இரவு, யானை வாகன புறப்பாடும் நடக்கிறது. நாளை தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை, 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.