Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்குறுங்குடி சிவன் கோயிலில் ... செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீராமர் வழிபட்ட உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீராமர் வழிபட்ட உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2023
02:06

ஆர்.எஸ்.மங்கலம்;  ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளதால், வெளியூர் பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோயிலில் முகாமிட்டு, தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில், பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த மூலவர் விநாயகர் மீது, பகல் முழுவதும் சூரிய ஒளிபடும் வகையில், கருவறை அமைய பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். மேலும், ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன்பாக, இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த விநாயகர் கோயில் சிறப்பு பெற்று வழங்கி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயில் சீரமைக்கப்பட்டும், கோயில் முகப்பில் புதிதாக மண்டபம் கட்டப்பட்டும், நாளை (ஜூன் 8) காலை 10:45 மணிக்கு மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, 11:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜூன் 5 ல் விநாயகர் விக்னேஸ்வரர் பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மறுநாள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை 9:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீப ஆராதனையும் நடைபெற்றது. முன்னதாக ராமநாதபுரம் தேவஸ்தான திவான், கோயில் திருப்பணி குழு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோயிலில் இருந்து யாகசாலை பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக சென்று யாகசாலையில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணகுதி தீபாரணையும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை 7:45 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, நாடீ சந்தானம், ஆகிய பூஜைகளும், மகா பூர்ணாகுதி தீபாரணையும் நடைபெற்று, நாளை காலை 10:45 மணிக்கு மேல் 11:45 மணிக்குள் கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் தேவஸ்தான திவான், ஜமீன்தார், கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில், ராமநாதபுரம் சமஸ்தான ராணி சேதுபதி கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar