Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டியில் கோயில் ... மழை வேண்டி நள்ளிரவில் மண்பானையில் பொங்கல் விழா மழை வேண்டி நள்ளிரவில் மண்பானையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்டைய கால தானம் வழங்கியதற்கான சூலக்கல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பண்டைய கால தானம் வழங்கியதற்கான சூலக்கல் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2023
04:06

திருப்பாசேத்தி: திருப்பாச்சேத்தியில் 2வது முறையாக தானம் வழங்கியதற்கான சூலக்கல் கண்டெடுக்கப்பட்டள்ளது. தமிழகத்தில் கோயில்களில் மூன்று கால பூஜை உள்ளிட்டவைகள் நடைபெற நிலங்கள் உள்ளிட்டவைகள் தானமாக வழங்குவது மன்னர்கள் வழக்கம். தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்து கல்வெட்டுகளில் பொறித்து வைப்பார்கள். சிவன், காளி, அய்யனார் கோயில்களுக்கு தேவதானம் என்ற பெயரில் "சூலாயுதம்" வடிவமைத்தும் ,பெருமாள் கோயில்களுக்கு திருவிளையாட்டம் என்ற பெயரில் " சக்கரமும் " கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். திருப்பாச்சேத்தி அரசு பள்ளி அருகே கிழக்கு நோக்கிய நிலையில் ஒன்றரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பட்டிய கல்லில் புடைப்புசிற்பமாக சூலக்கல் கடந்த 6ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதே போன்ற சூலக்கல் 200 மீட்டர் தொலைவில் சுண்ணாம்பு காளவாசல் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. புடைப்புச் சிற்பமாக சூலாயுதம் செதுக்கப்பட்டுள்ள இந்த சூலக்கல்லும் கிழக்கு நோக்கிய நிலையிலேயே உள்ளது. இப்பகுதி மக்கள் இதனை காளீஸ்வரர் என வழிபடுகின்றனர். சோனைமுத்து கூறுகையில்: திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் சிவாலயம் அமைந்துள்ளது. பச்சை மரகத லிங்கமும் இக்கோயிலில் உண்டு, திருப்பாச்சேத்தி ரயில் நிலையம் அருகில் 10 ஏக்கரில் சிவாலயம் இருந்துள்ளது. பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்ட இந்த சிவாலய பராமரிப்பிற்கும், பூஜைக்கும் உதவ நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.அது சம்பந்தமான சூலக்கல் இது. ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட சூலக்கல்லிற்கும் இதற்கும் இடையில் சுமார் 200 மீட்டர் தொலைவு இருக்கும். எனவே கோயிலுக்கு நிலம் வழங்கியதை குறிக்கும் சூலக்கல் , மேலும் சூலாயுதத்தை சிவனாக வழிபடுவது கிடையாது, ஆனால் இங்கு இதனை சிவனாக வழிபடுகின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar