Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதீஷ்வரர், உஜ்ஜைனி மாகாளியம்மன் ... கோட்டை வாராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நிறைவு கோட்டை வாராகி அம்மன் கோயிலில் ஆஷாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பின்றி வீணாகி வரும் வீற்றிருந்த பெருமாள் கோயில்
எழுத்தின் அளவு:
பராமரிப்பின்றி வீணாகி வரும் வீற்றிருந்த பெருமாள் கோயில்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2023
12:06

மேலுார்: பனங்காடியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீற்றிருந்த பெருமாள் கோயில், பராமரிப்பில்லாமல் வீணாகி வருவதால் பக்தர்கள் கவலைப்படுகின்றனர்.

மேலுார் அருகே பனங்காடியில் 12ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களால் வீற்றிருந்த பெருமாள் கோயில் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கட்டப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயிலின் சுவர்கள் முழுவதும் பிராமிய மற்றும் வட்டெழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் உள்ளது. இக்கோயிலின் வரலாறு மற்றும் 172 ஏக்கர் நிலங்கள் குறித்து கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் முதன்மை திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. போதிய வருவாய் இல்லாமல் கோயில் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. டிரஸ்டி பெருமாள் கூறியதாவது: கும்பாபிஷேகம் முடிந்து 300 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கோயில் கோபுரத்தை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத்துறையினர் உதவி செய்ய வேண்டும். தனி அர்ச்சகருக்கு உரிய சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது, என்றார். ஊராட்சி தலைவர் சுப்புராமன் கூறியதாவது: பூஜாரி குறிப்பிட்ட நாட்களில் வந்து செல்வதால், மற்றநாட்களில் சாமி கும்பிட வரும் பக்தர்கள் திரும்பிச் செல்கின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் டிரஸ்டிகள் கோயில் நிலங்களை மீட்டு வருவாயை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் பங்களிப்போடு கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். பூஜாரியை வைத்து கோயிலில் மூன்று கால பூஜைகள் நடத்தி பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar