Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மங்கனி திருவிழாவை ... வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை விழா
எழுத்தின் அளவு:
நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை விழா

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2023
11:07

அவிநாசி: நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு குழு,அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் கொங்கு மண்டல மக்கள் சார்பில் நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை விழா நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி கோவை, திருப்பூர்,ஈரோடு மற்றும் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிக்களுக்கான நீர் தேவைகளை வழங்குவதில் நொய்யல் நதி இன்றியமையாததாக விளங்குகிறது.சுமார் 180 கி.மீட்டர் பாய்ந்து ஓடி வரும் நொய்யல் நதி கிட்டதட்ட 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க,நொய்யல் நதியை பாதுகாத்திட ஊர்வலமாக வந்த விழிப்புணர்வு ரத யாத்திரையை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் மேளதாளம் இசைத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில்,திருவிளக்கு ஏற்றி நொய்யல் ரத யாத்திரை விழாவை ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்தானந்தா துவக்கி வைத்தார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளையின் தலைவர் அவிநாசிலிங்கம் வரவேற்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சிக்கான அறிமுக உரையை நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாரதி வாசித்தார். மேலும் திருப்பூர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சாமிநாதன், சத்யசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ராஜேஷ்வரன், நொய்யல் பெருவிழாவின் செயலாளர் சரவணன், வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விட்டல்ராஜ்,இந்திய தேசிய விவசாயிகள் நலச்சங்கம் மணி,மூர்த்தி தம்புரான், சுந்தர்ராஜ் அடிகளார் மற்றும் துறவிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவிகளின் நாட்டியம் மற்றும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar