Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆடி பௌர்ணமி, ஆடிச்செவ்வாய்; கோவிலில் ... ஆடிச்செவ்வாய்; காளியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆடிச்செவ்வாய்; காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குற்றாலம் கோவிலின் 500 ஆண்டுகள் பழமையான உலோக பாத்திரங்கள் கடத்தி விற்பனை; கண்டுகொள்ளாத அறநிலையத் துறை
எழுத்தின் அளவு:
குற்றாலம் கோவிலின் 500 ஆண்டுகள் பழமையான உலோக பாத்திரங்கள் கடத்தி விற்பனை; கண்டுகொள்ளாத அறநிலையத் துறை

பதிவு செய்த நாள்

01 ஆக
2023
01:08

தென்காசி: குற்றாலம், குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான, 500 ஆண்டுகள் பழமையான உலோக பாத்திரங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் கடத்தி, ஏலம் போட்டனர்.

அறநிலையத் துறையினர் அதை கண்டு கொள்ளாமல் பெயரளவுக்கு சிலை கடத்தல் தடுப்பு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவிழா நாட்களில் கட்டளை செய்வதற்காக, 500 ஆண்டுகளுக்கு முன், சொக்கம்பட்டி ஜமீன் தரப்பில் செம்பு, பித்தளை, வெண்கல பாத்திரங்கள் வழங்கி உள்ளனர். அதை, கோவிலுக்கு சொந்தமான கல் மண்டபத்தில் பாதுகாத்தனர். பல ஆண்டுகளுக்கு முன் அரசு ஆணைப்படி, கல் மண்டபம், அறநிலையத்துறையிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதை எதிர்த்து அறநிலையத் துறை வழக்கு தொடர்ந்தது. கல் மண்டபத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, அறநிலையத் துறைக்கு பெற்றனர். இருப்பினும், கல் மண்டபம் குற்றாலம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் இருந்தது. சில நாட்களுக்கு முன் அங்கிருந்த பழமையான பாத்திரங்களை, டிராக்டரில் கடத்திச் சென்று ஏலம் விட்டனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் பாத்திரங்களை எடுத்துச் செல்வதை ஹிந்து முன்னணி அமைப்பினர் வீடியோ பதிவு செய்தனர். உடனடியாக கோவில் நிர்வாகத்திலும் புகார் செய்தனர். அறநிலையத்துறையினர் கண்டு கொள்ளவில்லை.உடனடியாக போலீசில் புகார் செய்யவில்லை. ஹிந்து முன்னணி பதிவு செய்த பாத்திரங்கள் கடத்தும் வீடியோ, சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்ணதாசன், தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கும் நோக்கில், பெயரளவிற்கு திருநெல்வேலி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். இருப்பினும், பாத்திரங்கள் மீட்கப்படவில்லை. பாத்திரங்களை மீட்டு கோவிலில் பாதுகாக்க வேண்டும். கடத்தி விற்பனை செய்த இரு துறையினர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar