Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரையில் வேள்வி பூஜை ; பக்தர்கள் ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம்; பக்தர்கள் தரிசனம் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் முழுமையாக காட்சி தரும் நந்தி
எழுத்தின் அளவு:
மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் முழுமையாக காட்சி தரும் நந்தி

பதிவு செய்த நாள்

07 ஆக
2023
08:08

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 58 அடியாக சரிந்த நிலையில் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை முழுதும் வெளியே தெரிகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பண்ணவாடி கிராமம் உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் வழிபட்ட ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் தேவாலயம் இருந்தது. மேட்டூர் அணை கட்டிய பிறகு, இப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இதனால் பண்ணவாடி மட்டுமின்றி கோட்டையூர், செட்டிப்பட்டி கிராமங்கள் அணை நீர்த்தேக்க பகுதிகளாக மாறி, தண்ணீரில் மூழ்கின. ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் மூழ்கின.

மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும்போது, தேவாலய கோபுரம், ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தென்படும். தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம், 57.94 அடியாக உள்ளது. இதனால் அணை நீர்பிடிப்பு பகுதி பல கி.மீ.,க்கு வறண்டு காட்சியளிக்கிறது. இந்நிலையில் நந்தி சிலை முழுமையாக காட்சியளித்தது. தேவாலய கோபுரத்தின் மேற்பகுதியும் தெரிகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி நீர் பிடிப்பு பகுதியில், நேற்று முன்தினம் மாலை முதல் மழை பெய்தது. அத்துடன் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை அணைக்கு, 2,406 கனஅடியாக இருந்த நீர்வவத்து, 2,862 கனஅடியாக மாலையில் அதிகரித்தது. அணை நீர்மட்டம், 57.94 அடி, நீர் இருப்பு, 23.17 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 9,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.




 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar