Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணியில் ஆவணி கார்த்திகை ... திருச்சுழி அருகே பழமையான விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோவில் தங்கம் 168.68 கிலோ பாரத ஸ்டேட் வங்கி மும்பை கிளையில் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2023
06:09

சென்னை, திருச்செந்துார் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, தங்க நகைகளை உருக்கியதில் கிடைத்த, 168.68 கிலோ தங்கக் கட்டிகள், பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பக்தர்கள் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்திய, பல மாற்று பொன் இனங்கள், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாலா தலைமையிலான குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டன. நகைகளில் இருந்த அரக்கு, அழுக்கு, போலி கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டன. பிரித்தெடுக்கப்பட்ட பல மாற்று பொன் இனங்கள், மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றப்பட்ட தங்கக் கட்டிகள் தங்கப் பத்திரமாக, பாரத ஸ்டேட் வங்கி மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டன. இதன் மதிப்பு, 99.77 கோடி ரூபாய். தங்க மதிப்புக்கு வழங்கப்படும் வட்டி வீதம், 2.25 சதவீதம். இதனால், ஆண்டுக்கு வட்டித் தொகையாக 2.25 கோடி ரூபாய் கிடைக்கும். இத்தொகை கோவில் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும். தங்க முதலீட்டு பத்திரத்தை, நேற்று தலைமைச் செயலகத்தில், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகனிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நேற்றைய நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாலா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் மணிவாசன், ஹிந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன், பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் கோவிந்த் நாராயணன் கோயல் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கோவில்களுக்கு கிடைக்கும் ஆண்டு வட்டி; திருச்செந்துார் சுப்பிரமணியசாமி சுவாமி கோவிலுக்கு, 2.25 கோடி ரூபாய், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு, 24.09 லட்சம் ரூபாய், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு, 1.04 கோடி ரூபாய், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு, 39.13 லட்சம் ரூபாய், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு காமாட்சியம்மன் கோவிலுக்கு, 39.29 லட்சம் ரூபாய்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஒரே நாளில் பிரதோஷம், சிவராத்திரி வருவது சிறப்பானதாகும். பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய ... மேலும்
 
temple news
கோவை : இந்துக்களாகிய நமக்குள் எப்போதும் பேதங்கள் இருக்கக்கூடாது அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்தை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ஆனி மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழநி கோயிலில் ஆனி மாத ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 01 ல்   கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar