Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழைக் காரணமாக அரவிந்தர் அறை தரிசனம் ... பைரவர் ஜெயந்தி; பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனின் அம்சமான அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் பைரவர் ஜெயந்தி; பிரம்மபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் மூலவர் சிவலிங்கத்தில் இருந்து வரும் தண்ணீர்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் மூலவர் சிவலிங்கத்தில் இருந்து வரும் தண்ணீர்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 டிச
2023
02:12

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மடப்புரம் ஊராட்சியில் உள்ள மண்மலை கிராமத்தில் மங்கல நாயகி சமேத மண்மலை நாதர் கோவில் உள்ளது.  இக்கிராமத்தில் உள்ள குளத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சிறிய கோவில் அமைத்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இன்று காலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுவாமியை பார்த்தபோது சுவாமியின் சிலை மீது தண்ணீர் வடிந்தது.  அதனை கண்ட  பக்தர்கள் பரவசத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து  சிவலிங்கத்தை வழிபாடு செய்து வருகின்றனர். தொடர்ந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீர் வடிந்து வருவது பக்தர்களை  பரவசப்படுத்தியுள்ளது. சிவலிங்கத்தில் தண்ணீர் வடியும் நிகழ்வு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள ... மேலும்
 
temple news
அவிநாசி; காசி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ காசி ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா, ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வில்லியனுார்; திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar