Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் மூலவர் ... அலட்சியம் வேண்டாம்; சபரிமலை பக்தர்களுக்கு அறிவுரை அலட்சியம் வேண்டாம்; சபரிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பைரவர் ஜெயந்தி; பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனின் அம்சமான அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பைரவர் ஜெயந்தி; பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனின் அம்சமான அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 டிச
2023
03:12

மயிலாடுதுறை; பைரவர் ஜெயந்தி திருநாளான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தன்று தோன்றியதாக புராணம் கூறுகின்றது. சனியின் குருவாக போற்றப்படும் பைரவரை துதித்தால் ஏழரை சனி, அஷ்டம சனி ஆகிய பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என ஜோதிடம் கூறுகின்றது. இன்று கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியான பைரவாஷ்டமியை முன்னிட்டு காசிக்கு இணையான பைரவ சேத்திரமாக போற்றப்படும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள அஷ்ட பைரவர்கள் சன்னதியில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதுபோல் சீர்காழி மணிக்கூண்டு அருகே தனியே கோவில் கொண்டுள்ள சொர்ணாகர்ஷன பைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.கே.ஆர்.சிவசுப்பிரமணியன் குடும்பத்தினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோல குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் ஆனந்த காலபைரவர்  கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் இதில் பங்கேற்று தேங்காய், பாகற்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பல்வேறு தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar