Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சஷ்டி விரதம்; கந்தன் அருள் ... நத்தம் மாரியம்மன் கோவிலில் மார்கழி பூஜை; பக்தர்கள் தரிசனம் நத்தம் மாரியம்மன் கோவிலில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

18 டிச
2023
09:12

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 26 ம் தேதி தேர் திருவிழாவும், 27 ல் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.

புகழ் வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவில் ஆண்டிற்கு இரு முறை நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சன விழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த இரு விழாக்களின் போது மூலவரான நடராஜர் வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள் தருவார் என்பது மிக சிறப்பு. இந்த ஆண்டின் ஆருத்ரா தரிசன விழா இன்று (18ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவ கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாததீட்சிதர் உற்வச கொடியை ஏற்றி வைத்தார். மேலும் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேரோட்டம். இம்மாதம் 26 ஆம் தேதி நடைபேறுகிறது. இன்றைய தினம் நடராஜபெருமானும் - சிவகாமசுந்தரி அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, நான்கு வீதிகளில் வலம் வருவார்கள். அடுத்த நாளான 27 ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி அன்று அதிகாலை நடராஜபெருமானுக்கும் - சிவகாமசுந்தரி அம்மனுக்கும் நடராஜர் கோவிலின் உள் வளாகத்தில் உள்ள, ஆயிரங்கால் மண்டப முகப்பில், அபிஷேகம் நடைபெறும் பின்பு சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களிலும் காலை மாலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி புறப்பாடும், விசேஷ நாதஸ்வர கச்சேரிகளும், தேவார திருவாசக பன்னிரு திருமுறைகளும் நடைபெறும் விழா ஏபாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராம தீட்சதர் தலைமையில் பொது தீட்சதர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar