Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி திருவாதிரை; கைலாசநாதர் ... சுப்பிரமணியர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு சிறப்பு பூஜை சுப்பிரமணியர் கோயிலில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிவாசலில் துவா செய்த ஐயப்ப பக்தர்கள்; மத நல்லிணக்கத்துடன் வழிபாடு
எழுத்தின் அளவு:
பள்ளிவாசலில் துவா செய்த ஐயப்ப பக்தர்கள்; மத நல்லிணக்கத்துடன் வழிபாடு

பதிவு செய்த நாள்

27 டிச
2023
05:12

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே ஐயப்ப பக்தர்கள் மத நல்லிணக்கத்தோடு வேம்பார்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் துவா செய்துவிட்டு, ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை செய்து அன்னதானம் வழங்கினர்.

வேம்பார்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் வேம்பார்பட்டி ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக 200க்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்து 48 நாள் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து வாரம் தோறும் சனிக்கிழமை கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், பஜனை, அன்னதானம் நடந்தது. இன்று மண்டல பூஜை அன்னதான விழா நடந்தது. வேம்பார்பட்டி ஐயப்பன் கோயிலில் கூடிய ஐயப்ப பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்துவிட்டு பின் ஊர்வலமாக சென்று கிராம கோயில்களில் சுவாமிகளை வழிபட்டனர். பின் மத நல்லிணக்கத்துடன் வேம்பார்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு சென்றனர். பள்ளிவாசலில் அசரத் பாத்தியா ஓதி துவா செய்தனர். ஐயப்ப பக்தர்களை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜனாப் பி.எம்‌.எம்.அக் வரவேற்றார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, அன்னதானம் நடந்தது. இதில் தொழிலதிபர் அமர்நாத், அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் ஐயப்பன் கோயிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ரத ஊர்வலம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar