Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5000 கயிறுகளால் உருவான அரியக்குடி ...  கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி அஷ்டமி; ஆனந்தவல்லி,சோமநாதர் கோவிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா
எழுத்தின் அளவு:
மார்கழி அஷ்டமி; ஆனந்தவல்லி,சோமநாதர் கோவிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா

பதிவு செய்த நாள்

04 ஜன
2024
03:01

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் மார்கழி அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சப்பர திருவிழாவில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து ஜீவராசிகளுக்கு படியளப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி நடைபெற்ற மார்கழி அஷ்டமியை முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமிகளுக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் தனித்தனி ரிஷப வாகனங்களில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் பிரியா விடையுடன் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு வெளியே பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த சப்பரங்களுக்கு எழுந்தருளினர். சப்பரங்களுக்கு முன்னர் முருகன் வள்ளி தெய்வானையுடனும், விநாயகரும் சென்றனர்.இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை பாகபத் அக்ரஹாரம், மெயின் ரோடு, 4 ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். அப்போது ஏராளமானோர் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விதமாக நெல், நவதானியங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை தூவியபடி வந்தனர். சுவாமி வீதிவுலாவின் போது ஏராளமானோர் தங்களது வீடுகளின் வாசல்களில் நின்று அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், டிராபிக் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், எஸ்.ஐ.,பூபதி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் 10 நாட்கள் நடந்த பங்குனி உத்திர திருவிழா நேற்று ஆராட்டுடன் நிறைவு பெற்றது. ஐயப்பன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் உள்ள சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி கோயில் பங்குனி உற்ஸவ ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாயொட்டி, ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
நெய்வேலி; வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த பங்குனி உத்திர விழா ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பெங்களூரு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில், 12 ஜோதிர்லிங்கத்தையும், ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar