Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொட்டும் மழையிலும் 200 கிமீ பழனிக்கு ... பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் தரிசனம் பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோமுக்தீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
கோமுக்தீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

09 ஜன
2024
03:01

மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதினத்தின் கோமுக்தீஸ்வரர் கோயிலில் தை ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை ஆதினத்தில் அதுல்ய குஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தரின் தந்தையை சிவஇருதயபாதருக்கு வேள்வி நடத்த ஆயிரம் பொற்காசுகள் தேவைப்பட்டது. கோமுக்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து இருந்த திருஞானசம்பந்தர் இடரினும் தளரினும் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். பாடல் பாடி முடிந்ததும் பூதகணம் மூலம் கொடிமரம் அருகில் பலிபீடத்தில் ஆயிரம் பொற்காசுகளை இறைவன் கொடுத்து அனுப்பியதாக புராண வரலாறு தெரிவிக்கின்றது. அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற இவ்வாலயம் பல்வேறு சிறப்புகளையுடையது. இவ்வாலயத்தின் தை ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடி மரத்திற்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷபகொடி  ஏற்றப்பட்டது. இதில், திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் வருகின்ற 12ம்தேதி திருஞானசம்பந்தர் பொன் உலவாக்கிழி பெறும் ஐதீக விழா, தினந்தோறும் சுவாமி புறப்பாடு, 16ம்’ தேதி தேரோட்டம், 17ம் தேதி ரதசப்தமி தீர்த்தவாரி முக்கிய விழாவாக நடைபெறவுள்ளது.  இன்று நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar