கோவை; என்.எச். ரோடு டவுன்ஹால் சந்திப்பில் இருக்கும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.