Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி முதல் சோமவாரம்; ஆபத் சகாய வில்வ ... சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை சங்கீத உற்சவம் கோலாகல துவக்கம்; இசையால் ஆராதனை செய்த கலைஞர்கள்
எழுத்தின் அளவு:
செம்பை சங்கீத உற்சவம் கோலாகல துவக்கம்; இசையால் ஆராதனை செய்த கலைஞர்கள்

பதிவு செய்த நாள்

19 பிப்
2024
10:02

பாலக்காடு; பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில் செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம் கோலாகல துவங்கியது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு எல்லா ஆண்டும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு உற்சவத்தின் கொடியேற்றம் கடந்த 16ம் தேதி நடந்தது. உற்சவத்தையொட்டி மூன்று நாள் நடக்கும் சங்கீத உற்சவம் நேற்று கோலாகலமாக துவங்கியது. மாலை 6.00 மணிக்கு பிரபல இசைக் கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன் சங்கீத உற்சவத்தை செம்பை வைத்தியநாத பாகவதரின் உருவச் சிலைக்கு முன் வைத்த குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உற்சவ நிர்வாக குழு தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கீழத்தூர் முருகன், வெங்கிட நாராயணன், காயத்திரி தம்பான், சைனுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவரது சங்கீத கச்சேரி நடந்தது. அவருக்கு விவேக் ராஜ (வயலின்), திருப்பூணித்துறை ராதாகிருஷ்ணன் (மிருதங்கம்), ஆலுவா ராஜேஷ் (கடம்), ஹரீஷ் ஆர் மேனன் (கஜ்ஜிரா), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். அதன்பின் விஜய் ஜேசுதாசின் சங்கீத கச்சேரி நடைபெற்றது. இவருக்கு விவேக் ராஜ (வயலின்), ஹரி (மிருதங்கம்), திருப்பூணித்துறை ராதாகிருஷ்ணன் (கடம்), ஹரீஷ் ஆர் மேனன் (கஜ்ஜிரா), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். இன்று மாலை சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீத அச்சேரி நடக்கிறது. நாளை காலை 8.30க்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன தீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடக்கிறது. மாலை 6.00க்கு சென்னை ராமநாதனின் சாக்ஸபோன், பாதிரியார் போள் பூவதிங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம் நடக்கும். பிப்., 21ல் ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar