காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பல்வேறு மாநில பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா துவக்கியது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் வருடத்தோறும் நடைபெறும் நாட்டியாஞ்சலி 19ம்ஆண்டு துவக்க விழா 5நாட்கள் நடைபெறும். முதல் நாள் விழாவில் பல்வேறு மாநில கலைஞர்கள் கலந்து கொண்டனர். நாட்டியாஞ்சலி விழாவை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் குத்துவிளக்குயேற்றி துவக்கி வைத்தார். முதல் நாள் சென்னை மிருணாலினி தியாகராஜன், மீரா கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் சித்ரா கோபிநாத், மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு சிங்கப்பூரி அரவிந்த் குமரசாமி, ஆஸ்திரேலியா சாய்பிரியா, மங்களூர் ஆர்த்தி, சென்னை மங்களா, ஸ்ரீலங்கா திவ்யா சுஜென், சென்னை சிவகுமார், முப்பை அபேஷா நிரஞ்சன்,புனே மிதா பதக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிருந்து பரதநாட்டிய குழுவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவ்விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுக்களித்தனர்.