பதிவு செய்த நாள்
08
மார்
2024
04:03
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி பத்திரகாளி அம்மன், கருப்பண சுவாமி கோயிலில், சிவராத்திரியை முன்னிட்டு, நாடார் குலதெய்வ வழிபாட்டாளர்கள் சார்பில், கோயில் முன்பு நீண்ட வரிசையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையல் இடப்பட்டது. மூலவர்களுக்கு சந்தனம், குங்குமம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்களின் கும்மியாட்டமும், இளைஞர்களின் ஒயிலாட்டமும் நடைபெற்றது. விழாவில், மேலச்செங்குடி, வாணியக்குடி, கடலூர் உட்பட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த கிராமத்தினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.