செஞ்சி; செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு அமாவாசையை முன்னிட்டு கொய்யாபழங்களால் அலங்காரம் செய்திருந்தனர்.
செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்து வருகின்றனர். மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து கொய்யா பழங்களால் அலங்காரம் செய்தனர். காலை 8 மணிக்கு சிறப்பு பஜனையும், வழிபாடும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.