மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2024 12:03
நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான இக்கோயிலில் கேரளாவில் இருந்து பெண்கள் இருமுடி கட்டு ஏந்தி கடலில் குளித்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவதால் இதை பெண்களின் சபரிமலை என்று அழைக்கின்றனர். இங்கு மாசிக் கொடை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் மூன்று கால பூஜை , அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று பெரிய சக்கர தீவெட்டி முதல் தீபத்தை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் ஏற்றி பவனியை துவக்கி வைத்தார். இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், எம்.பி., விஜய்வசந்த் பெரிய சக்கர தீவெட்டி கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாளை மார்ச் 13 அதிகாலை 12:00 மணிக்கு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.