Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பயணம் இனிதாக அமைய... சிவபூஜை செய்த சிவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பித்தா... என பாடியது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2024
01:03

‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். சிவனை இவர் ‘பித்தன்’ என அழைக்கக் காரணம் என்ன தெரியுமா?
சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த நேரத்தில், அவரை ஆட்கொள்ள நினைத்த சிவன், முதியவர் வேடத்தில் வந்தார். சுந்தரர் தன் முன்னோருக்கும், தனக்கும் அடிமை எனத் தெரிவித்தார். “ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்?” என சுந்தரர் கோபித்துக் கொண்டார். பின்பு தான் வந்திருப்பவர் சிவன் என்ற உண்மை சுந்தரருக்குப் புரிந்தது. தன் மீது பாடல் பாடும்படி சிவன் கேட்கவே, எப்படி சொல்லி ஆரம்பிப்பது எனக் குழம்பிய சுந்தரர், “என்னை பித்தன் எனத் திட்டினாயே! அந்த வார்த்தையிலேயே துவங்கு” என்றார். சுந்தரரும் அந்த வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொண்டார்.
சிவனின் மனைவி பார்வதி கருணைக்கடலாக விளங்குகிறாள். தன் பிள்ளைகளான உலக மக்கள் எவ்வளவு தவறு செய்தாலும் பொறுத்துப் போகிறாள், மன்னிக்கிறாள். ஆனால் அவரது இன்னொரு மனைவியான கங்கை அப்படியல்ல. ஒருவர் தண்ணீரில் விழுந்து விட்டால் மூன்று முறை மூழ்கி மூழ்கி வெளியே வருவார். அதற்குள் அவரை யாரும் காப்பாற்றாவிட்டால் ஒரேயடியாக மூழ்கி விடுவார். இதனால் தான் ‘தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்’ என்பர். அதிக தவறுகளை மன்னிக்கும் பார்வதியை உடலில் வைத்திருக்கும் சிவன், மூன்றே பிழைகளை மட்டும் மன்னிக்கும் கங்கையை தலையில் துாக்கி வைத்திருக்கிறார். நாம் நமக்கு அதிக நன்மை செய்பவர்களைத் தான் தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடுவோம். சிவனோ குறைந்த பிழை பொறுப்பவளை தலையில் துாக்கி வைத்துள்ளார். இதனால் தான் அவரைப் பித்தன் என்கிறோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar