முருகன் கோவில்களில் பங்குனி கிருத்திகை கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2024 05:03
ஊட்டி; முருகன் கோவில்களில் கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது.
நீலகிரியில் ஊட்டி எல்க்ஹில் முருகன் கோயில், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் பிற முருகன் கோயில்களில் மாதந்தோறும் நடக்கும் கிருத்திகை விழ சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று கிருத்திகை விழாவை ஒட்டி அன்னமலை முருகன் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில்களில் காலை,6: 00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 12 அபிஷேகங்கள் செய்யப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். பின், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
பங்குனி உத்திரம்; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார். முருகன், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர்.