பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
10:04
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தாசம்பாளையத்தில் இன்று ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ, ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத் தில், ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து இன்று காலை, 7 மணிக்கு யாக பூஜையை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக சென்றன. காலை 9.30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தச தரிசனம் திருவாராதணம், வேத அலங்கார தரிசனம், நிகழ்வுகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கருடவாகனத்தில் பெருமாள் திரு வீதி உலா நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 20ம் தேதி மாலை, முளைப்பாரி ஊர்வலம், தாசம்பாளையம் ராமர் கோவிலில் இருந்து, கோவிலுக்கு வந்தடைந்தது. இரவு வாஸ்து சாந்தி பூஜையும், பூர்ணாஹுதி சாற்று முறையும் நடந்தது. நேற்று கால ஹோமங்கள், வேத பாராயணம், திவ்ய பிரபந்தம், சாற்று முறை நடைபெற்றன. காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி வேங்கடாத்ரி, வேதவியாச வெங்கடேச பட்டர் சாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசம் அடைந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், நிர்வாகத்தினர், ஜானகிராம் அறக்கட்டளை நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்தனர்.