பதிவு செய்த நாள்
24
ஏப்
2024
03:04
புதுச்சேரி : பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் 11ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி நவசண்டி ஹோமம் நேற்று நடந்தது. புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில் , பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 11ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி நவ சண்டி ஹோமம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு கலச ஸ்தாபனம், மாத்ருகா பூஜை, மண்டப பூஜை, முதற்கால சண்டிகா நவாவரண பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால சண்டிகா நவாவரண பூஜை மற்றும் சண்டி ஹோமம், 13 அத்யாய ஹோமங்கள், பூர்ணாஹூதி, விேஸாத்தார ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை நடந்தது. தொடர்ந்து தீபாரதனை, கலசம் புறப்பாடும், அதைத் தொடர்ந்து கலசம் புறப்பாடு கோவிலை வலம் வந்து, அம்பாளுக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் 1:30 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு, அம்பாளுக்கு விசேஷ அலங்காரம், பவுர்ணமி பூஜை, தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.