திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் சிதிலமடையும் சுவாமி வாகனங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2024 02:04
மேலுார்; திருவாதவூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் வாகனங்களை பாதுகாக்கும் அறை குப்பை கிடங்காக மாறிய நிலையில் வாகனங்கள் அனைத்தும் சிதலமடைஸதாக நிர்வாகிகள் மீது புகார் அளிந்துள்ளது
திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் கடந்த 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். வாயு தேவன் வழிபாடு செய்தமையால் வாதவூர் என்ற பெயர் பெற்றது. மேலும் மகாசிவராத்திரி, நவராத்திரி, வைகாசி திருக்கல்யாணம் உள்ளிட்ட 9 மாதம் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இவ் விழாவின் போது சுவாமிகள் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஆனால் இவ் வாகனங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் பராமரிக்கவில்லை.
பக்தர்கள் கூறியதாவது : இக் கோயிலில் 9 மாதங்கள் நடைபெறும் திருவிழாவின் போது ரிஷப, சிம்ம, காமதேனு, குதிரை, மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருள்வார். திருவிழா காலங்கள் தவிர்த்து பிற நாட்களில் வாகனங்களை பாதுகாக்க கோயிலில் வாகன காப்பக அறை உள்ளது. இவ் அறையை பராமரிக்காமல் குப்பை கிடங்காக மாறிவிட்டது. அதே வேளை வாகனங்கள் அனைத்தும் வெயில் மற்றும் மழையில் நனைந்து சிதிலமடைகிறது. அதனால் அதிகாரிகள் வாகனங்களை, காப்பக அறைகளில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றனர்.
பேஷ்கார் பிரபு கூறுகையில், பக்தர்கள் கோரிக்கை குறித்த பரிசீலிக்கப்படும்" என்றார்.