காரைக்கால்; காரைக்காலில் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டு தோறும் அம்மையாரின் கணவரிடம் சிவபெருமாள் மாங்கனி கொடுத்து அனுப்பு நிகழ்ச்சி அப்போது அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும். இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும்.அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கையால் நடந்து செல்லுவது சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா மிகவிமர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இத்தாண்டு வரும் ஜூன் 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு. மறுநாள் 20ம் தேதி காரைக்கால் அம்மையார் அன்று அழைக்கப்படும் புனிதவதியார் பரமதத்தர் திருக்கல்யாணம். 21ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம் அன்று காலை முத்துப்பல்லக்கில் நகர்வலம் வருதல் பின்னர் பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல்,சிவபெருமான் காவியுடைருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து, பவழக்கால் விமானத்தில் வீதி உலா வரும் போது பக்தர்கள் தன் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடைபெருகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று அம்மையார் சன்னதி வளாகத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.