ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம். அமைச்சர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2024 06:05
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டைஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்ரல் 23 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாள் விழாவாக பக்தர்கள் விரதமிருந்து அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அக்னிசட்டி ஏந்தி வந்தனர். இரவு பூக்குழி விழா நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. அலங்காரத்தில் அம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.