Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை கடைசி சோமவாரம்; ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி வைபவம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடை விடுமுறை: திருச்செந்துாரில் குவியும் பக்தர்கள்.. பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
கோடை விடுமுறை: திருச்செந்துாரில் குவியும் பக்தர்கள்.. பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

13 மே
2024
01:05

திருச்செந்துார்; கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
வாகன நெரிசலில், திருச்செந்துார் நகரமே ஸ்தம்பித்தது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகவும். யாத்ரீகர்கள் ஸ்தலமாகவும் உள்ளது. திருவிழாவை தவிர்த்து, விஷேச தினங்­களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். கோயில் நடை நேற்றுஅதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தன. தமிழகத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், நுாற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால், திருச்செந்துார் நகர் பகுதி முழுவதும், கடுமையான போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி விழாவில் இந்தாண்டு 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar