Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ... பாலசமுத்திரம் முத்தாலம்மன் கோவில் விழா பாலசமுத்திரம் முத்தாலம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாய் மூகாம்பிகை அலங்காரத்தில் காஞ்சி சந்தவெளி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
தாய் மூகாம்பிகை அலங்காரத்தில் காஞ்சி சந்தவெளி அம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

18 மே
2024
03:05

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் சித்திரை பெருவிழா துவங்கியது. மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கொல்லுார் தாய் மூகாம்பிகை அலங்காரமும் நடந்தது.

இரண்டாம் நாள் உற்சவமான நேற்று இரவு 7:00 மணிக்கு காஞ்சி பாலா குழுவினரின் 108 திருவிளக்கு பூஜையும், சந்தவெளியம்மனுக்கு கர்ப்பரக்ஷாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் நாள் உற்சமான நாளை இரவு 7:00 மணக்கு சந்தவெளி அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, பரதலாயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நான்காம் நாள் உற்சமான வரும் 19ம் தேதி காலை 7:00 மணிக்கு, 108 பால்குடங்களுடன் பூங்கரகம் புறப்பாடும், மதியம் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், அம்மன் வர்ணிப்பும் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், அன்னதானமும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிடப்படுகிறது. இரவு 7:30 மணிக்கு மலர், மின் அலங்காரத்தில் எழுந்தருளும் சந்தவெளியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்படுகிறது. விழா நிறைவு நாளான 21ம் தேதி மதியம் 12:00 மணிக்கு உற்சவ சாந்தி அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சந்தவெளியம்மனுக்கு சாந்தசொரூபிணி அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு மஹாதீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர், ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவினர் மற்றும் இளைஞர் அணி நண்பர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar