Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கோயில்களில் வைகாசி விசாக ... காமாட்சி அம்மன் கோவிலில் ஆதிசங்கரர் ஜெயந்தி மகோற்சவம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆதிசங்கரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை ; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை ; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

22 மே
2024
05:05

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார். அதன்படி முதல் நாள் உற்சவமான நேற்றுமுன்தினம் காலை, ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தார். இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் எழுந்தருளி வரதராஜர் வீதியுலா வந்தார். மூன்றாம் நாள் பிரபல உற்சவமான இன்று காலை, கருடசேவை உற்சவம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏழாம் நாள் பிரபல உற்சவமான வரும் 26ம் தேதி காலை தேரோட்டமும், 28ம் தேதி அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது. பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவாமி வீதியுலா செல்லும்போது, விபத்து ஏற்படாமல் இருக்க, தற்காலிகமாக மின் இணைப்பு துண்டிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களை பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்பு துறையும், விபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் களத்தில் பணியில் இருப்பர். இதுமட்டுமல்லாமல், எஸ்.பி., சண்முகம் தலைமையில், 1,500 போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar