பதிவு செய்த நாள்
23
மே
2024
08:05
கிருஷ்ணகிரி; லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, சுவாமி தேர்பவனி நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 15ல் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், 20 ல் சுவாமி திருக்கல்யாண வைபவமும் நடந்தது. அன்றிரவு கருட வாகனத்திலும், 21ல் நரசிம்ம ஜெயந்தியும், அன்றிரவு யானை வாகனத்திலும், நரசிம்மர் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று காலை, 10:00 மணிக்கு, உற்சவ நரசிம்மர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்து, பெரிய தேரில் அமர்த்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் கோவில் வளாகத்தில், 1,800 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து, குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்க உள்ளன.