சிதம்பரம்; காட்டுமன்னார்கோயில் அடுத்த உடையார்குடி பாலமுருகன் கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் அடுத்த உடையார்குடி துர்க்கை அம்மன் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு மகா அபிஷேகமும் தீபாரணையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை இன்னிசை மேல கச்சேரிகளுடன் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.