Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பாலமுருகன் ... நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி தேரோட்டம் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

23 மே
2024
12:05

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 7ம் தேதி துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, கடந்த 18ம் தேதி காலையில் பள்ளிப்பட்டு, ரூபநாராயணநல்லுார் வழியாக கோ.பூவனுாரில் உள்ள தாய் வீட்டிற்கும், 19ம் தேதி கர்னத்தம் கிராமத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கும் மங்களநாயகி அம்மன் சென்று வரும் ஐதீக நிகழ்வு நடந்தது. 9வது நாள் உற்சவமாக, தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9:00 மணியளவில் அம்மனுக்கு பலி காணிக்கை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளியதும், மங்களநாயகி உற்சவரை திருத்தேரில் வைத்து, தேர்க்கால் பூஜை நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உட்பட முக்கிய பிரமுகர்கள், வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. தேரடியில் இருந்து கடைவீதி, கர்னத்தம் ரோடு வழியாக கோவிலை சென்றடைந்து, மாலை 4:00 மணிக்கு மேல், மீண்டும் தேரடிக்கு வந்தடைந்தது. டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை முகாசபரூர் ஆதீன பரம்பரை அறங்காவலர் ஜமீன் வீரசேகர பொன்னம்பல வேலுசாமி கச்சிராயர் அரண்மனை குடும்பத்தினர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் செய்திருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு, நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமத் பொய்கையாழ்வார் சபை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
 சென்னை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை ... மேலும்
 
temple news
 வால்பாறை; புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar