திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2024 11:05
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் இன்று பவுர்ணமி கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்றும் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடைபெறும். இன்று வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கருட வாகன சேவை தொடங்கியது. சர்வாலங்கார அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி, கருடன் வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கருட சேவையில் துணை இஓ லோகநாதம் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.