திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொட்டையரசு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2024 03:05
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா இன்று நடந்தது. கோயிலில் மே 13ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய விசாக திருவிழாவில் தினம் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்ஸவம் நடந்தது. நேற்று பால்குட உற்சவம் நடந்தது. இன்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். பக்தர்களின் திருக்கண் மண்டபங்களில் அருள்பாலித்து, இரவு 11.00 மணிக்கு பூ பல்லக்கில் சுவாமி கோயில் சென்றடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.