Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்யாண தீர்த்தம் கோடிலிங்கேஸ்வரர் ... அகத்தீஸ்வரர் கோவிலில் 64 பைவரர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோப்பு ஸ்வாமி திருவிழா: ஆட்டுக்கிடா பலியிட்டு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2012
10:11

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற தோப்பு ஸ்வாமி திருவிழாவில், நூற்றுக்கணக்கான ஆட்டு கிடா பலியிட்டு சிறப்பு பூஜை நடத்தினர். வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை பாசன வசதிபெறும் கிராமங்கள், அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்ராயன்மலையில் உற்பத்தியாகும் வெள்ளாற்றுபடுகை கிராமங்கள் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட கிராமங்களில், பத்து ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பாக்கு மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. பாக்கு உற்பத்தி தொழிலில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பாக்கு காய்ககளை மரத்தில் இருந்து அறுவடை செய்யும் மரமேறும் தொழிலாளர்கள், சிங்கிபுரம் நாடார் தெரு அருகே ஆற்றங்கரையில் அமைந்துள்ள, காவல் தெய்வமான மதுரை வீரன் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று, விபத்து மற்றும் உயிர் சேதமின்றி பாதுகாக்க வேண்டுதல் வைக்கின்றனர். பாக்கு அறுவடை சீஸன் முடிவுக்கு வரும் நிலையில், ஐப்பசி மாதம் மூன்றாம் வாரத்தில், வேண்டுதல் நிறைவேற்றி உயிர்காத்த ஸ்வாமிக்கு, ஆட்டு கிடா பலிகொடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துகின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் அந்த திருவிழா, "தோப்பு ஸ்வாமி திருவிழா, என அழைக்கப்படுகிறது. சிங்கிபுரத்தில் நேற்று நடந்த "தோப்பு ஸ்வாமி திருவிழாவையொட்டி, அதிகாலையில் இருந்து கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள், நூற்றுக்கணக்கான ஆட்டு கிடாக்களை பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். ஸ்வாமிக்கு பலிகொடுத்த ஆட்டுக்கிடாக்களை சமைத்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமாலை;திருவண்ணாமாலை, கோட்டுப்பாக்கத்தில், பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழாவில் குழந்தை வரம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே ராமேஸ்வரம் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று லட்சகணக்கனோர் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி பெருமாள் மீது அசைக்க முடியாத தனது பக்தி காட்டியுள்ளார் பக்தர் ஒருவர். தனது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar