Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் நன்கொடையாளர்களுக்கு வைர ... திருப்பதி வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு உண்டா? திருப்பதி வரும் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசிவிசுவநாதர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 நவ
2012
11:11

தென்காசி: தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் கடந்த மாதம் 30ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்பாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.விழாவின் 9ம் நாளான நேற்று காலையில் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு அம்பாள் எழுந்தருளினார். காலை 9.30 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரின் ஒரு பகுதி வடத்தினை ஆண்களும், மறு பகுதி வடத்தினை பெண்களும் இழுத்தனர். மேள தாளம், பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி 10.30 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. பக்தி கோஷங்கள் முழங்க சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. அம்பாள் திருத்தேரிலிருந்து கோயிலுக்கு எழுந்தருளினார். தேரோட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் எம்.எல்.ஏ., சின்னச்சாமி, கோயில் நிர்வாக அதிகாரி கணபதி முருகன், அ.தி.மு.க.,நகர செயலாளர் முத்துக்குமார், நகராட்சி துணைத் தலைவர் சுடலை, நகர ஜெ.,பேரவை செயலாளர் முருகன்ராஜ், கூட்டுறவு மாரிமுத்து, சுப்புராஜ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணம்மாள், சங்கரசுப்பிரமணியன், சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், அகமதுஷா, அண்ணா தொழிற்சங்கம் செந்தூர்பாண்டி, பரமசிவன், கந்தசாமி பாண்டியன், இளவரசு, குத்தாலிங்கம், பா.ஜ., திருநாவுக்கரசு, பிச்சாண்டி செட்டியார் சைக்கிள் டீலர் பழனி, சதீஷ், டாக்டர் மோகன், ராஜாமணி டெக்ஸ்டைல் ராஜாமணி, சண்முகசுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் செய்திருந்தனர். மாலையில் திருக்குறள் நடராஜனின் ஆன்மிக சொற்பொழிவு, இரவு அம்பாள் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. இன்று (8ம் தேதி) மாலையில் ஐயாத்துரையின் ஆன்மிக சொற்பொழிவு, இரவு ரிஷப வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான நாளை (9ம் தேதி) காலையில் அம்பாள் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளல், மாலையில் தெற்குமாசி வீதியில் காசிவிசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல், இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar