Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசிவிசுவநாதர் கோயிலில் தேரோட்டம் ... பெரிய காஞ்சிபுரம் ஐயப்பனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு உண்டா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 நவ
2012
11:11

சென்னை: திருமலைக்கு வரும் பக்தர்கள் திருநாமம், விபூதி அணிய தேவையில்லை என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் கண்ணையா தெரிவித்தார். சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள், வைணவராக இருந்தால், நெற்றியில் திருநாமம் வைத்திருக்க வேண்டும்; சைவராக இருந்தால், நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் இட்டிருக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறை, இம்மாதம், 16ம் தேதியிலிருந்து, நடைமுறைக்கு வருகிறது என, செய்தி வெளியாகியுள்ளது. இப்படி ஒரு திட்டம், நிச்சயம் நடைமுறைப் படுத்தப் படாது என,கோவில் நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளனர். எனவே திருப்பதிக்கு வரும் பக்தர்கள் நெற்றியில் திருநாமமோ, விபூதியோ வைக்க தேவையில்லை. திருப்பதிக்கு தினமும், 26 ஆயிரம் பக்தர்கள் நடைபயணம் செல்கின்றனர். இவர்கள் உடமைகளை தூக்கி, திருமலைக்கு செல்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் உடமைகள், அடிவாரத்தில் பெறப்பட்டு, தரிசனம் முடிந்து வரும் பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டம் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.பாத யாத்திரை பக்தர்களுக்கு, தேநீர் அல்லது காபி, பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்தமான குடிநீர் ஆகியன வழங்கவும் தேவஸ்தான கூட்டத்தில் வலியுறுத்துவேன். மாற்றுத்திறனாளிகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும், "இளநிலை நிர்வாக அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திர மாநிலம் என்ற முகவரிக்கு, மூன்று நாட்களுக்கு முன், கடிதம் எழுதி, அதன் நகலை, திருமலைக்கு செல்லும்போது எடுத்துச் செல்லவேண்டும்.கடித நகலை, இளநிலை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் காண்பித்து, அனுமதி பெற்று, காத்திருக்காமல் ஏழுமலையானை தரிசிக்கலாம்.இவ்வாறு கண்ணையா கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar