Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் காளைக்கு சிலை அமைத்து ... ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை நாளை மாலை திறப்பு ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி பங்காரம்மா கோவில் திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி பங்காரம்மா கோவில் திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
10:06

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பங்காரம்மா கோயில் திருவிழா வெகு விமரிசையாக  நடைபெற்றது. ஸ்ரீகாளஹஸ்தி - பிச்சாட்டூர் சாலையில் கிராம தேவதை கோயில் மறைந்த முன்னாள் அமைச்சரான பொஜ்ஜல. கோபால கிருஷ்ணா ரெட்டி பதவியில் இருந்த சமையத்தில் கட்டப்பட்ட கோயிலில் நேற்று புதன்கிழமை தற்போது வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இந்த கிராம தெய்வக் கோயில் கைலாசகிரி, உபாத்யாயநகர், எல்எஸ்ஐசி காலனி, ராஜீவ் நகர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அருகில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு பிரமாண்டமாக நடைபெறுகின்றன. இந்த திருவிழாவை நிர்வகிப்பதற்கு அப்பகுதியினர் குழு அமைத்துள்ளனர். இந்த நிலையில் கோயிலில் திருவிழாவை யொட்டி
 பங்காரம்மாவுக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை மாலை வரை பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  கோவிலில் காலை முதலே  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் பங்காரம்மா கோவிலில் நடைபெற்ற திருவிழாவை யொட்டி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ., பொஜ்ஜல.சுதீர்ரெட்டியின் மனைவி ரிஷிதா ரெட்டி, கோவில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் ஆகியோர் கோயில் சார்பில்,  அம்மனுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் பட்டு புடவைகளை கோவில் அர்ச்சகரிடம் வழங்கினர்.

இதில்  கோயில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் பேசுகையில்:   பங்காரம்மா கோவில் திருவிழாவை யொட்டி ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில், எம்.எல்.ஏ., சுதீர்ரெட்டி மனைவி ரிஷிதா ரெட்டி, அம்மனுக்கு பட்டு புடவை மற்றும் பூஜை பொருட்களை வழங்கியதாகவும் அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மனை விரைவாக தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.மேலும்  மாலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.  சிவன் கோயில் சார்பில் அதிகாரிகள் மல்லிகார்ஜுன் பிரசாத் சதீஷ் மாலிக், சிறு கோயில்கள் பொறுப்பாளர் லட்சுமய்யா ஆகியோர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar