Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துடியலூர் சித்தி விநாயகர் கோவில் ... பரசுராமலிங்கேஸ்வரருக்கு ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே கிராமத்தில் 5 கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
05:06

திருப்போரூர்; போலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் உள்ளிட்ட ஐந்து கோவில்களில், மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்போரூர் ஒன்றியம், பொன்மார் ஊராட்சியில் அடங்கிய போலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், நீராளம்மன், கங்கையம்மன், சப்த கன்னிமார்கள், ராதா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி ஆகிய ஐந்து கோவில்களில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. அங்கு, 12 ஆண்டுகளுக்கு பின், ஐந்து கோவில்களிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 10ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றதையடுத்து, புனிதநீர் கலசங்கல் புறப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க, விமானகலசத்தை வந்தடைந்தன. இதனையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் ஐந்து கோவில்களின் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து, மஹா தீபாராதனைசெய்யப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப் பட்டது. இதில், பொன்மார், போலச்சேரி, மாம்பாக்கம்உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், காஞ்சிபுரம் தி.மு.க., – எம்.பி., செல்வம், திருப்போரூர் வி.சி., – எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், மாவட்ட குழு துணைத்தலைவர் காயத்திரி அன்புச்செழியன், பொன்மார் ஊராட்சி தலைவர் நாராயணன், துணைத்தலைவர், வார்டு கவுசிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

திரவுபதி அம்மன்: திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளாக கோவில் விமான கோபுரம், மண்டபம் உள்ளிட்டவற்றில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவைமுன்னிட்டு, நேற்றுகாலை 10:30 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 9:30 மணிக்கு, யாக சாலையிலிருந்து புனிதநீர் கலசங்கல் புறப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்களால் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மஹா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பன்கேற்று, அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar